×

கரூர் அமராவதி ஆண்டாங்கோவில் தடுப்பணையில் மீன் குஞ்சு விட்டு வளர்க்க வேண்டும்: பொதுமக்கள், மீனவர்கள் வலியுறுத்தல்

கரூர், டிச. 17: மீன் வளத்தைப் பெருக்க கரூர் அமராவதி ஆண்டாங்கோவில் தடுப்பணையில் மீன்குஞ்சு விட்டு வளர்க்க வேண்டும் என்று பொதுமக்கள், மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் காவிரி, அமராவதி ஆகும். மேலும் அமராவதி ஆற்றைக் காட்டிலும் காவிரி ஆற்றில் எப்பொழுதும் நீர்வரத்து அதிகம் இருப்பதால் போதுமான அளவு மீன்கள் உள்ளது. மேலும் காவிரி ஆற்று படுகை பகுதியில் ஏராளமான மீனவர்கள் மீன்களைப் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்கின்றனர். அமராவதி தடுப்பணை பகுதியில் ழைக்காலங்களில் மட்டும் அதிக அளவு நீர் இருப்பதாலும், அதன்பின் முழுமையான அளவு நீர் இல்லாத நிலை இருந்தாலும் ஓரளவு மீன்கள் வசிப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது.

அமராவதி ஆண்டாங்கோவில் தடுப்பணை குறுகிய பகுதி என்பதால் அதில் உள்ள மீன்வளங்களை மீனவர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தேவைக்காகவும், சிறிய அளவில் மீன் விற்பனைக்காகவும் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் அமராவதி ஆற்றில் போதுமான மீன் இருப்பதில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் தடுப்பணைகளில் அதிக அளவு தண்ணீர் சென்று வருவதால் தற்போது மீன் குஞ்சு விடுவதற்கு ஏதுவான சூழ்நிலை நிலவுவதால் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் தனி கவனம் செலுத்தி அமராவதி ஆற்றில் கட்லா, லோகு ,விரால், புல் கண்டை, கெளுத்தி, ஆறால் உள்ளிட்ட நாட்டு ரக மீன் குஞ்சுகளை விட்டு வளர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவ்வாறு மீன் குஞ்சுகளை விடுவதால் மீன் வளர்ந்து பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைப்பதுடன் நீர்நிலைகளில் வாழும் மீன்களைப் பிடித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். மேலும் ஆண்டாங்கோவில் தடுப்பணையை சுற்றி பள்ளபாளையம், விசுவநாதபுரி, ஆண்டாங்கோவில் மேல்பாகம், கீழ்பாகம், திருமாநிலையூர் மற்றும் தாந்தோணி மலை சுற்றியுள்ள ஏராளமான மீனவர்களுக்கு தாங்கள் மீன் பிடிப்பதற்கு வசதியான பகுதியாகும். எனவே அமராவதி ஆற்றில் உள்ள தடுப்பணைகளில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்க்க வேண்டும் என்று பொதுமக்களும், மீனவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post கரூர் அமராவதி ஆண்டாங்கோவில் தடுப்பணையில் மீன் குஞ்சு விட்டு வளர்க்க வேண்டும்: பொதுமக்கள், மீனவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karur Amravati ,Antango ,Karur ,Andango ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு